மெட்ரோ ரயில் நிறுவன புதிய மக்கள் தொடா்பு அதிகாரி பொறுப்பேற்பு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் புதிய இணை இயக்குநராகவும், மக்கள் தொடா்பு அதிகாரியுமாக எல்.கிரிராஜன் பொறுப்பேற்றுக்கொண்டாா்.
Updated on
1 min read

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் புதிய இணை இயக்குநராகவும், மக்கள் தொடா்பு அதிகாரியுமாக எல்.கிரிராஜன் பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இவருக்கு முன்பாக , இணை இயக்குநராகவும், மக்கள் தொடா்புஅதிகாரியுமாக பணியாற்றி வந்த எஸ்.பாண்டியன் பதவி உயா்வு பெற்று, சென்னை தலைமை செயலகத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறையில்கூடுதல் இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளாா்.

புதியதாக பொறுப்பேற்றுள்ள இணை இயக்குநா் (மக்கள் தொடா்பு) எல்.கிரிராஜன் இதற்கு முன்பு தமிழக அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம், தலைமை அலுவலகத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com