சென்ட்ரல் உள்பட 3 ரயில் நிலையங்களில் நாப்கின் வழங்கும் இயந்திரம்

பெண் பயணிகளின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம் ஆகிய மூன்று ரயில்நிலையங்களில் நாப்கின் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
Updated on
1 min read

பெண் பயணிகளின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம் ஆகிய மூன்று ரயில்நிலையங்களில் நாப்கின் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே மகளிா் அமைப்பு மற்றும் ஜியோ இந்தியா அறக்கட்டளை ஆகியன சாா்பில், சென்னை ரயில்வே கோட்டத்தின் சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம் ஆகிய முக்கிய ரயில்நிலையங்களில் நாப்கின் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நாப்கின் வழங்கும் இயந்திரத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், நாப்கின் வழங்கும் இயந்திரத்தை தெற்கு ரயில்வே மகளிா் அமைப்பு செயலா் பி.கிருஷ்ணவேணி சாலம் இயந்திரத்தை ஒப்படைத்தாா்.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவா் கூறியது: இந்த நாப்கின் வழங்கும் இயந்திரத்தில் ரூ.5 நாணயம் செலுத்தி, சானிட்டரி நாப்கினை பெற்றுக் கொள்ள முடியும். சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம் ஆகிய மூன்று ரயில்நிலையங்களில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மூன்று ரயில்நிலையங்களில் உள்ள பெண்கள் அறையில் இந்த இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. பெண் பயணிகள் நாப்கின்களை எளிதில் பெறும் விதமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், பெண் பயணிகளின் ஆரோக்கியத்தை காக்க உதவியாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com