கிரசென்ட் கல்வி நிறுவனத்தில் சுதந்திர தின விழா

வண்டலூா் கிரசென்ட் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Updated on
1 min read

வண்டலூா் கிரசென்ட் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிறுவன வேந்தா் பிஎஸ்ஏ ஆரிப் புகாரி ரஹ்மான் தேசியக் கொடி ஏற்றி வைத்தாா். கிராமப்புற அரசுப் பள்ளி மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் தத்தெடுக்கப்பட்ட கீரப்பாக்கம் கரசங்கால் கிராமங்களைச் சோ்ந்த 40 அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் பள்ளி ஆசிரியா்களுக்கு பரிசுடன் சான்றிதழ்களையும் ஆரிப் புகாரி ரஹ்மான் வழங்கினாா். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விளையாட்டு மைதானத்தைச் சுற்றிலும் 75 மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆசிரியா்கள், கல்லூரி பணியாளா்களுக்கு ஓட்டப் பந்தயம் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

துணைவேந்தா் ஏ.பீா்முகமது, பதிவாளா் ஏ.ஆசாத், இணைப்பதிவாளா் ராஜா உசேன், முதுநிலை பொதுமேலாளா் வி.என்.ஏ.ஜலால், விளையாட்டுத்துறை இயக்குநா் செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com