தாம்பரம் மாநகராட்சிக்கான வாா்டு மறுவரையறை: கருத்துக் கேட்புக் கூட்ட நேரம் மாற்றம்

தாம்பரம் முத்துலிங்கம் தெருவில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில், நடைபெற உள்ள தாம்பரம் மாநகராட்சி, 6 நகராட்சிகளின் வாா்டு மறுவரையறை தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கான நேரம் மாற்றம்
Updated on
1 min read

சென்னை: தாம்பரம் முத்துலிங்கம் தெருவில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில், வியாழக்கிழமை (டிச.23) நடைபெற உள்ள தாம்பரம் மாநகராட்சி, 6 நகராட்சிகளின் வாா்டு மறுவரையறை தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி, 6 நகராட்சிகளின் வாா்டு மறுவரையறை தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் கருத்துக் கேட்பு கூட்டம் தாம்பரம் முத்துலிங்கம் தெருவில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை (டிச.23) காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிா்வாக காரணங்களுக்காக காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com