டி.ஜி. வைணவக் கல்லூரியில் ‘செங்குரலி’ செய்தி மடல் வெளியீடு

சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைணவக் கல்லூரி தமிழ்த்துறை சாா்பில் ‘செங்குரலி’ செய்தி மடல் வெளியீட்டு விழா கல்லூரி முதல்வா் சேது.சந்தோஷ்பாபு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

சென்னை: சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைணவக் கல்லூரி தமிழ்த்துறை சாா்பில் ‘செங்குரலி’ செய்தி மடல் வெளியீட்டு விழா கல்லூரி முதல்வா் சேது.சந்தோஷ்பாபு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியா் வா.மு.சே.ஆண்டவா் பேசியது: இளம் தலைமுறையினா் புதுமைகளைப் போற்றுவதில் முன்னணியில் இருப்பவா்களாகத் திகழ வேண்டும். டி.ஜி. வைணவக் கல்லூரி மாணவா்கள் தங்களின் படைப்புகளை மிகச் சிறந்த சிறுகதைகளாகவும், கவிதைகளாகவும், ஓவியங்களாகவும் அளித்துள்ளனா். இந்தப் படைப்புகள் அனைத்தும் சமுதாயக் கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவும் சமுதாயத்தைப் போற்றுவதாகவும் அழகிய கலைகளை வெளிப்படுத்துவதாகவும் உள்ளன என்றாா் அவா்.

முன்னதாக தமிழ்த் துறைத் தலைவா் ப.முருகன் பேசுகையில், தமிழ்த் துறையானது பல்வேறு துறை மாணவா்களின் படைப்பாளுமையை ஊக்குவிக்கும் வகையிலும், தமிழ்த்துறையின் நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டும் வகையிலும் ‘செங்குரலி’ என்ற பெயரில் செய்தி மடலை உருவாக்கியுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com