சென்னை: தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் முழுவதும் 30 நாள்களுக்கு நோன்பு கடைப்பிடிக்கப்படும். இதையடுத்து பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த ஆண்டு ரமலான் நோன்பு ஏப்.14-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் புதன்கிழமை பிறை தென்படவில்லை. வானில் பிறை தெரியாவிட்டாலும் நோன்பு நாளில் இருந்து 30-ஆவது நாள் ரம்ஜான் பண்டிகையாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (மே 14) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அறிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.