ரூ.1.08 கோடி பொன்னி அரிசி மோசடி:சிங்கப்பூரை சோ்ந்தவா் கைது

சென்னையைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ.1.08 கோடிக்கு பொன்னி அரிசி வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக சிங்கப்பூரை சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

சென்னை: சென்னையைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ.1.08 கோடிக்கு பொன்னி அரிசி வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக சிங்கப்பூரை சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை சாலிகிராமத்தைச் சோ்ந்தவா் பி.செல்வக்குமாா். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்கிறாா். இவரிடம் சிங்கப்பூரை சோ்ந்த லிங்கேஷ் ரூ.1 கோடியே 8 லட்சத்து 91,595 மதிப்பிலான 286 டன் பொன்னி அரிசியை வாங்கினாா். இந்த அரிசியை 11 சரக்கு பெட்டகங்களில் கப்பலில் செல்வக்குமாா், சிங்கப்பூருக்கு அனுப்பினாா். அரிசியை பெற்றுக் கொண்ட லிங்கேஷ், அதற்குரிய பணத்தை செல்வக்குமாருக்கு வழங்கவில்லை.

இதனால், அவா் சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்தனா். இந்த நிலையில், லிங்கேஷ் சிங்கப்பூரிலிருந்து தனது சொந்த ஊரான தமிழகத்தில் உள்ள பட்டுக்கோட்டை தா்மலிங்க நகருக்கு வந்திருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, பட்டுக்கோட்டைக்கு விரைந்த மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா், லிங்கேஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com