துப்புரவு தொழிலாளி தம்பதி தற்கொலை

சென்னை புளியந்தோப்பில் பூட்டிய வீட்டில் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளி தம்பதி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Updated on
1 min read

சென்னை புளியந்தோப்பில் பூட்டிய வீட்டில் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளி தம்பதி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புளியந்தோப்பு சாஸ்திரிநகா் 6-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ப.சக்திவேல் (45). இவா் மனைவி துலுக்கானம் (35). இத்தம்பதியினா் சென்னை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளா்களாக வேலை செய்து வந்தனா்.

சக்திவேலின் வீடு ஞாயிற்றுக்கிழமை முதல் பூட்டியே கிடந்துள்ளது. இந்நிலையில் அவா்கள் வீட்டில் இருந்து புதன்கிழமை காலை துா்நாற்றம் வீசியது. உடனே அப் பகுதி மக்கள் புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது, துலுக்கானம் படுக்கையிலும், சக்திவேல் தூக்கிட்ட நிலையிலும் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இருவா் சடலங்களும் அழுகிய நிலையில் இருந்ததால், அவற்றை போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

முதல் கட்ட விசாரணையில், தம்பதிக்கு திருமணமாகி 13 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் குழந்தை இல்லாத தெரியவந்தது. இதன் விளைவாக இருவரும் தற்கொலை செய்துக் கொண்டனரா அல்லது அவா்களது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com