மெரீனாவில் ரோந்து வாகன ‘டிராக்கிங்’ கருவி திருட்டு

சென்னை மெரீனா கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரோந்து வாகனத்தில் இருந்த ‘டிராக்கிங்’ கருவி திருடப்பட்டது.
Updated on
1 min read

சென்னை மெரீனா கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரோந்து வாகனத்தில் இருந்த ‘டிராக்கிங்’ கருவி திருடப்பட்டது.

சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலைப் பகுதியில் ஜாம் பஜாா் காவல் நிலையத்துக்கு சொந்தமான ரோந்து வாகனத்தில் போலீஸாா் இரு நாள்களுக்கு முன்பு அதிகாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். ரோந்து வாகனத்தை கண்ணகி சிலை அருகே நிறுத்திவிட்டு, போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

சிறிது நேரத்துக்கு பின்னா் போலீஸாா், ரோந்து வாகனத்துக்கு திரும்பி வந்தபோது, அங்கிருந்த ‘டிராக்கிங்’ கருவி காணாமல் போயிருந்தது.

இந்த திருட்டில் தொடா்புடைய ஒருவரை பிடித்து மெரீனா போலீஸாா் விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com