சென்னை: சென்னை வடபழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடைப்பெற்றது.
மேலும், உற்சவருக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேர் வடிவிலான கல்மண்டபத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.
சென்னை வடபழனி ஆண்டவர் கோயில் உற்சவர் மண்டபம் நீண்ட நாட்களுக்கு பிறகு புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டது.
கல்லால் தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ள உற்சவர் மண்டபத்தில் வடபழநி ஆண்டவர் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.