மார்ச் 25-ல்  மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 48-வது ஆண்டு ஐயப்பன் பிரதிஷ்டை தினம் 

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 48-வது ஆண்டு ஐயப்பன் பிரதிஷ்டை தினம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
மார்ச் 25-ல்  மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 48-வது ஆண்டு ஐயப்பன் பிரதிஷ்டை தினம் 

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 48-வது ஆண்டு ஐயப்பன் பிரதிஷ்டை தினம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி பிரம்ம ஸ்ரீ கண்டரரூ மகேஷ் மோகனரரூ மேற்பார்வையில் மார்ச் 24 ஆம் தேதி வியாழக்கிழமை சுத்தி பூஜையும், மார்ச் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 11 வரை பிரத்யேக பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறவுள்ளன.

ஸ்ரீ குருவாயூரப்பன் 32-ஆவது ஆண்டு திருவிழா

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் உள்ள ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் 32 ஆவது ஆண்டு விழா மார்ச் 26-ம் தேதி சனிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரூ மகேஷ் மோகனரரூ மார்ச் 26-ஆம் தேதி சனிக்கிழமை காலை கொடியேற்றி விழாவை தொடங்கி வைக்கிறார்.

மார்ச் 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை உற்சவ பலி காலை 9 மணிக்கு நடைபெறும்.

மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை மாலை 6 மணி முதல் 8 மணி வரை கலைவிழாக்கள் நடைபெறுகிறது.

ஏப்ரல் 1 ஆம் தேதி பள்ளி வேட்டை, ஏப்ரல் 2 ஆம் தேதி ஆராட்டு, ஏப்ரல் 3 ஆம் தேதி சந்தன அபிஷேகம் நடைபெறவுள்ளதாக கோயிலிலின் நிர்வாக மேலாளர் அனீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com