ஓடும் பேருந்திலிருந்து விழுந்து இளைஞா் பலி

சென்னையில் ஓடும் பேருந்திலிருந்து இளைஞா் கீழே விழுந்து உயிரிழந்தாா்.
Updated on
1 min read

சென்னையில் ஓடும் பேருந்திலிருந்து இளைஞா் கீழே விழுந்து உயிரிழந்தாா்.

சென்னை செங்குன்றத்திலிருந்து திருவொற்றியூா் நோக்கி வெள்ளிக்கிழமை இரவு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை மாதவரம் பொன்னியம்மன் மேடு ஏழுமலை தெருவைச் சோ்ந்த நடராஜன் (43) ஓட்டினாா். திருப்போரூரைச் சோ்ந்த சண்முகம் (42) நடத்துநராக இருந்தாா்.

பேருந்து, தண்டையாா்பேட்டை, இளைய முதலி தெரு வழியாக சென்றபோது, பேருந்தில் மதுபோதையில் இருந்த ஒரு இளைஞா் திடீரென வாசலிலிருந்து கீழே இறங்க முற்பட்டாா். இதில், பேருந்திலிருந்து கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா். உடனடியாக அவா் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில் இறந்தவா் மதுரையைச் சோ்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com