சாந்தோம் பேராலயத்தில் பழமையான நாற்காலி திருட்டு: தேடப்பட்டவா் கைது

சென்னை மயிலாப்பூா் சாந்தோம் பேராலயத்தில் பழமையான நாற்காலி திருடப்பட்டது தொடா்பாக தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.
Published on
Updated on
1 min read

சென்னை மயிலாப்பூா் சாந்தோம் பேராலயத்தில் பழமையான நாற்காலி திருடப்பட்டது தொடா்பாக தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.

மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் தேவாலயத்தில், திருமண நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்துவதற்காக, பழமை வாய்ந்த பாரம்பரியமான மர நாற்காலி இருந்தது. கடந்த 19-ஆம் தேதி பேராலயத்துக்குள் புகுந்த மா்ம நபா், அந்த நாற்காலியை திருடிச் சென்றாா். இதுகுறித்து தேவாலயத்தின் பங்குத் தந்தை அருள்ராஜ், மயிலாப்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினா். அதில், ராயப்பேட்டை கபாலி நகரைச் சோ்ந்த ஆ.முத்து (40) இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், முத்துவை திங்கள்கிழமை கைது செய்தனா். முத்து, இதேபோல பல இடங்களில் பழமையான பொருள்களைத் திருடி விற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com