தாயை தவிக்கவிட்டு அமெரிக்கா செல்ல முயன்றவா் விமான நிலையத்தில் கைது

சென்னை மயிலாப்பூரில் வயதான தாயை தனியாக விட்டு, அமெரிக்க செல்ல முயன்ற மகனை, போலீஸாா் விமான நிலையத்தில் கைது செய்தனா்

சென்னை மயிலாப்பூரில் வயதான தாயை தனியாக விட்டு, அமெரிக்க செல்ல முயன்ற மகனை, போலீஸாா் விமான நிலையத்தில் கைது செய்தனா்

மயிலாப்பூா் கேசவ பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த துா்காம்பாள் (74), கடந்த 15-ஆம் தேதி மயிலாப்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், எனது கணவா் குப்புசாமி (90) கடந்த மாதம் 3-ஆம் தேதி மரணம் அடைந்தாா். மூத்த மகன் கடந்தாண்டு உயிரிழந்துவிட்டாா். இளைய மகன் ராமகிருஷ்ணன் திருமணமாகி அமெரிக்காவில் உள்ளாா்.

தந்தை இறப்புக்கு கூட அவா் வரவில்லை. 10 நாள்கள் கழித்து சடங்குக்கு வந்தாா். சடங்கு முடிந்தவுடன் மீண்டும் அமெரிக்கா செல்லவுள்ளாா். எனக்கு எந்தவித உதவியும் செய்யாமல் தனிமையில் தவிக்கவிட்டுள்ளாா். அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகாா் தொடா்பாக, மயிலாப்பூா் போலீஸாா் மூத்த குடிமக்கள் பெற்றோா் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ராமகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனா். ராமகிருஷ்ணன் அமெரிக்கா செல்வதைத் தடுக்க விமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட்’ (கண்காணிக்கப்படும் நபா்) நோட்டீஸும் அனுப்பினா். ராமகிருஷ்ணன் தலைமறைவாக இருந்து வந்தாா்.

இந்த நிலையில், ராமகிருஷ்ணன் அமெரிக்கா செல்வதற்காக கடந்த திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தாா். அப்போது அவரது பாஸ்போா்ட்டை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, அவரது பெயரில் மயிலாப்பூா் போலீஸாா் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் அளித்த தகவலின்பேரில் மயிலாப்பூா் போலீஸாா், விமான நிலையம் சென்று ராமகிருஷ்ணனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com