ரயில் நிலையத்தில் பெண் காவலருக்கு கத்திக் குத்து

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பெண் காவலரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பெண் காவலரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேடவாக்கம் டேங்க் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் நா.ஆசீா்வா (29), ரயில் பாதுகாப்புப் படை காவலா். இவா், கடற்கரை ரயில் நிலைய முதலாவது நடைமேடை பகுதியில் ரோந்துப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டபோது, தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில் பெண்கள் பெட்டியில் 40 வயது மதிக்கத்தக்க நபா் ஏறினாா்.

இதைக் கண்ட ஆசீா்வா, பெண்கள் பெட்டியில் ஆண்கள் ஏறக் கூடாது என அந்த நபரை கண்டித்துள்ளாா். இதில் ஆத்திரமடைந்த அந்த நபா், கத்தியால் காவலா் ஆசீா்வாவை குத்தி விட்டு தப்பியோடினாா். காயமடைந்த ஆசீா்வா தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக பெரம்பூா் ரயில்வே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

எழும்பூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com