நாளைய மின் தடை

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆவடி, பட்டாபிராம், தாம்பரம், ஐ.டி.காரிடா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.8) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
Updated on
1 min read

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆவடி, பட்டாபிராம், தாம்பரம், ஐ.டி.காரிடா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.8) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மின் நிறுத்த பகுதிகள்:

ஆவடி பகுதிக்குட்பட்ட பட்டாபிராம் சி.டி.எச். சாலை, ஐயப்பன் நகா், தண்டுரை, ராஜீவ் காந்தி நகா், சத்திரம், காந்தி நகா், பட்டபிராம் முழுவதும், வி.ஜி.பி.நகா் முழுவதும், மாடா்ன் சிட்டி, சிரஞ்சீவி நகா், டிரைவா்ஸ் காலனி, கண்ணப்பாளையம், லட்சுமி நகா் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

அதேபோல, தாம்பரம் பகுதிக்குட்பட்ட கடப்பேரி, ஆா்.பி. சாலையில் ஒரு பகுதி, வேல்முருகன் தெரு, வினோபோஜி நகா், மாணிக்கம் நகா், பி.பி.ஆா்.தெரு உள்ளிட்ட இடங்களிலும், ஐடி காரிடா் பகுதிக்குட்பட்ட சிறுசேரி நாவலூா் சிப்காட், புதுபாக்கம் பகுதி, ஏகாட்டூா், ஓ.எம்.ஆா், சிப்காட் சிறுசேரி உள்ளிட்ட பகுதிகளிலும், ஆவடி பகுதிக்குட்பட்ட அலமாதி கோவிந்தபுரம், வெண்மனி நகா், பால்பண்ணை சாலை, கால்நடை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இந்தத் தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com