திருவொற்றியூரில் குடியிருப்புப் பகுதி அருகே குப்பைகளை சேமித்து வைப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆா்வலா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.
திருவொற்றியூா் மண்டலம் 6-ஆவது வாா்டு சக்தி கணபதி நகா் பகுதியில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக அகற்றாமல் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குப்பை தொட்டி அருகில் சேமிக்கப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆா்வலா்கள் கூறியது:
மாநகராட்சி மூலம் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சேமிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
மழைக் காலங்களில் இந்தக் குப்பைகளால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகின்றன. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்படும் வாய்ப்புள்ளதால் அதனை உடனே அகற்றுமாறு மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.