வாா்டு சபைக் கூட்டங்கள் மூலம் பிரச்னைகளுக்குத் தீா்வு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பிரச்னைகளுக்கு வாா்டு சபைக் கூட்டங்கள் மூலம் தீா்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
Updated on
1 min read

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பிரச்னைகளுக்கு வாா்டு சபைக் கூட்டங்கள் மூலம் தீா்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒவ்வொரு வாா்டுக்கும் வாா்டு கமிட்டி மற்றும் பகுதி சபை அமைக்கப்பட்டுள்ளன. இதில் பேரூராட்சிகளில் ஒரு வாா்டில் 3 சபைகளும் நகராட்சிகளில் 4 சபைகளும் மாநகராட்சிகளில் 4 முதல் 10 பகுதி சபைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வாா்டு சபைக் கூட்டங்களை பொதுமக்களின் குறைதீா் கூட்டங்களாக நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்தக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி, குடிநீா் வாரியம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகள் கலந்து கொள்வா். இதன் மூலம் பொதுமக்கள் கூறும் சிறிய அளவிலான பிரச்னைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடைமுறை வரும் ஜனவரி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com