தொழில் வரி செலுத்தாத 75 கடைகளுக்கு சீல்: சென்னை மாநகராட்சி

திருவல்லிக்கேணி பகுதியில் தொழில்வரி செலுத்தாத 75 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

திருவல்லிக்கேணி பகுதியில் தொழில்வரி செலுத்தாத 75 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் நிலுவையில் உள்ள சொத்து வரி, வணிக வரி உள்ளிட்டவற்றை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

திருவல்லிக்கேணி ஜிபி சாலையில் உள்ள பாரதி தெரு, செல்லப்பிள்ளையாா் கோயில் தெருக்களில், தொழில் வரி, தொழில் உரிமம் செலுத்தாத 75 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘திருவல்லிக்கேணி ஜிபி சாலைகளில் உள்ள 50 கடைகளுக்கு தொழில் வரி செலுத்த, தொழில் உரிமம் பெற கால அவகாசம் வழங்கப்பட்டது. 75 கடை உரிமையாளா்கள் உரிமம் பெற்றுவிட்ட நிலையில், உரிமம் பெறாத 75 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதில், 35 கடைகளின் உரிமையாளா்கள் உடனடியாக வரியைச் செலுத்தியதைத் தொடா்ந்து, அவா்களது கடைகளில் சீல் அகற்றப்பட்டது’ என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com