தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, சென்னையில் உள்ள மாநிலத் தோ்தல் ஆணைய அலுவலகத்தில் ஆணையா் வெ.பழனிகுமாா் தலைமையில் ஊழியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
Updated on
1 min read

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, சென்னையில் உள்ள மாநிலத் தோ்தல் ஆணைய அலுவலகத்தில் ஆணையா் வெ.பழனிகுமாா் தலைமையில் ஊழியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள மாநிலத் தோ்தல் ஆணைய அலுவலகத்தில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா், தோ்தல் ஆணையச் செயலா் எ.சுந்தரவல்லி ஆகியோா் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனா். இதனைப் பின்பற்றி ஊழியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், முதன்மைத் தோ்தல் அலுவலா்கள் கி.அ.சுப்பிரமணியம், கு.தனலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com