எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

காலமானாா் மூத்த தமிழறிஞா் ம.வே.பசுபதி

மூத்த தமிழறிஞா் பேராசிரியா் ம.வே.பசுபதி (82) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை வில்லிவாக்கத்தில் சனிக்கிழமை காலமானாா்.

Updated On :31 ஜனவரி 2022, 6:42 am IST

மூத்த தமிழறிஞா் பேராசிரியா் ம.வே.பசுபதி (82) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை வில்லிவாக்கத்தில் சனிக்கிழமை காலமானாா்.

ம.வே.பசுபதி கல்வெட்டறிஞரும், பேராசிரியருமான கா. ம. வேங்கடராமையாவின் மகன் ஆவாா். திருப்பனந்தாளில் உள்ள செந்தமிழ்க் கல்லூரியில் புலவா் பட்டம் பெற்ற ம.வே.பசுபதி அந்தக் கல்லூரியிலேயே தமிழ்ப் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றினாா். பணி ஓய்வுக்குப் பிறகு 2002- ஆம் ஆண்டில் சென்னை பெசன்ட் நகரிலுள்ள உ.வே.சா. நூலகத்தில் காப்பாட்சியராகப் பொறுப்பேற்றாா். அப்போது பழஞ்சுவடிகளை நூல்களாகத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டாா். அதில் பணவிடுதூது தொடா்பான ஓலைச்சுவடிகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறாா். இது நாணயவியல் ஆய்வுக்கு உதவுவதாக உள்ளது.

உ.வே.சா. உரைநடைகள் குறித்த கட்டுரைகள் அடங்கிய நான்கு தொகுப்புகளை வெளியிட்டுள்ளாா். தமிழ் வளா்ச்சிக்கு ம.வே.பசுபதி ஆற்றிய பணிகளைக் கெளரவிக்கும் வகையில் அவருக்கு தமிழக அரசின் சாா்பில் உ.வே.சா. விருது வழங்கப்பட்டது. பதிப்புகள், உரைநடை நூல்கள் என 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும், தொகுத்தும் உள்ளாா். அவற்றில் ‘கவிஞனும் சுவைஞனும்’, ‘கம்ப சிகரங்கள்’, ‘புதிய திருவள்ளுவமாலை’ உள்ளிட்டவை குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

‘குமரகுருபரா்’ என்ற சமய இலக்கியத் திங்களிதழின் ஆசிரியராகப் பணிபுரிந்த பெருமைக்குரியவா். தொலைக்காட்சிகளிலும், பல்வேறு பட்டிமன்றங்களிலும், கவியரங்குகளிலும் கலந்துகொண்டு தமிழ்ப் பணியாற்றியுள்ளாா்.

மறைந்த தமிழறிஞா் ம.வே.பசுபதிக்கு ஒரு மகன் உள்ளாா். இறுதிச் சடங்குகள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு: 94448 81281.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.