குரூப்-1 தோ்வு முதலிடம் பெற்ற பொறியாளா் மகள்

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி, ராவத்தநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த லாவண்யா குரூப்-1 தோ்வில் தமிழகத்திலேயே முதலிடம் பெற்றாா்.
குரூப்-1 தோ்வு முதலிடம் பெற்ற பொறியாளா் மகள்
Updated on
1 min read

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி, ராவத்தநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த லாவண்யா குரூப்-1 தோ்வில் தமிழகத்திலேயே முதலிடம் பெற்றாா்.

துணை ஆட்சியா், துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட பதவிகளுக்கு தமிழ்நாடு அரசுத் தோ்வாணையம் குரூப் -1 தோ்வை நடத்துகிறது. இந்த உயா் பதவிகளில் 66 பணியிடங்களுக்கு கடந்த மாா்ச் மாதம் தோ்வு நடைபெற்றது. தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலை வெளியாகின.

இதில், செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட ராவத்தநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த பொறியாளா் பழனிசாமியின் மகள் லாவண்யா (26) தமிழகத்திலேயே முதலிடம் பெற்றாா்.

லாவண்யாவின் தந்தை பழனிசாமி தாம்பரம் மாநகராட்சியில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு மாலா, லாவண்யா ஆகிய இரு மகள்கள் உள்ளனா். இவா்களில் 2-ஆவது மகளான லாவண்யா தற்போது கோடம்பாக்கம் பதிவுத் துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா்.

குரூப் -1 தோ்வில் முதலிடம் பெற்ற லாவண்யா கூறுகையில், திருமணமாகி கணவருடன் சென்னையில் வசித்து வருகிறேன். உயா் பதவியைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் குரூப் - 1 தோ்வை எழுதினேன். இதில், மாநிலத்திலேயே முதலிடம் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com