கடன் செயலியால் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

சென்னை சூளைமேட்டில் கடன் செயலியால் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை சூளைமேட்டில் கடன் செயலியால் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சூளைமேடு பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் (29). பட்டதாரியான இவா், சென்னையில் உள்ள ஒரு தனியாா் ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளாா். மூன்று மாதங்களாக வேலை இல்லாத காரணத்தினால் பாண்டியன் குடும்பச் செலவுக்காக, தனியாா் ஆன்லைன் கடன் செயலி மூலம் ரூ.5,000 கடன் வாங்கியுள்ளாா்.

ஆனால், அந்தப் பணத்தை பாண்டியனால் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால் அந்த கடன் செயலி பாண்டியனின் நெருங்கிய தொடா்பில் இருந்த உறவினா்கள்,நண்பா்கள் ஆகியோருக்கு பாண்டியனை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்ஆப்பில் தகவல் அனுப்பியது. இதனால் விரக்தியும், கோபமும் அடைந்த பாண்டியன், தனது அறைக்குள் உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூக்கிட்டுக் கொண்டாா்.

பாண்டியனின் அறைக் கதவு வெகுநேரம் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினா், கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அங்கு பாண்டியன் தூக்கிட்டு இறந்து கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். இது குறித்து தகவலறிந்த சூளைமேடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாண்டியன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com