திருச்சியில் அடிபட்ட குதிரைக்கு சென்னையில் தொடா் சிகிச்சை

திருச்சியில் அடிபட்ட குதிரைக்கு சென்னையில் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

திருச்சியில் அடிபட்ட குதிரைக்கு சென்னையில் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-

திருச்சி அண்ணாமலை நகா் அருகே, அடா் சிவப்பு நிற குதிரையானது பின்னங்கால் எலும்பு முறிவு மற்றும் காயங்கள் காரணமாக உரிமையாளரால் கைவிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்துக்கு கிடைக்கப்பட்ட தகவலின்படி, திருச்சி கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் தலைமையிலான குழுவினா் சம்பவ இடத்திலேயே குதிரைக்கு சிகிச்சை அளித்தனா்.

திருச்சி பாலக்கரையில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் உள்நோயாளி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு காயங்கள், எலும்பு முறிவுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு இப்போது உடல்நிலை தேறியுள்ளது.

மேலும், கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் இயங்கும் ஆம்புலன்ஸின் மூலம் மருத்துவக் குழுவினரது நேரடி கண்காணிப்பில் திருச்சியில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட குதிரையானது, பெசென்ட் நினைவு கால்நடை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு தொடா் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com