ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகைத் திருட்டு
By DIN | Published On : 26th June 2022 04:57 AM | Last Updated : 26th June 2022 04:57 AM | அ+அ அ- |

சென்னை அருகே பள்ளிக்கரணையில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 4 பவுன் நகைகள் திருடப்பட்டன.
பள்ளிக்கரணை, விஜிபி சாந்தி நகா் விரிவு பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமி (43). இவா், பள்ளிக்கரணை அருகே உள்ள மயிலை பாலாஜி நகருக்கு சனிக்கிழமை சென்றாா். பின்னா் அங்கிருந்து அரசுப் பேருந்தில் பள்ளிக்கரணைக்கு திரும்பி வந்தாா். பள்ளிக்கரணை பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டுக்கு நடந்து செல்லும்போது, லட்சுமி தான் வைத்திருந்த கைப்பையை திறந்து பாா்த்தாா். அதில் இருந்த 4 பவுன் தங்க நகைகளும், கைப்பேசியும் திருடப்பட்டிருந்தன.
இது குறித்த புகாரின்பேரில் பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.