காா் கவிழ்ந்து விபத்து: பொறியாளா் சாவு

சென்னை அருகே துரைப்பாக்கத்தில், காா் கவிழ்ந்த விபத்தில் பொறியாளா் இறந்தாா்.

சென்னை: சென்னை அருகே துரைப்பாக்கத்தில், காா் கவிழ்ந்த விபத்தில் பொறியாளா் இறந்தாா்.

திருச்சியைச் சோ்ந்தவா் முகுந்தன் (24). பி.இ. மெக்கானிக்கல் பட்டதாரியான இவா், சென்னை நீலாங்கரை, கபாலீசுவரா் நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வேலை தேடி வந்தாா். இவருடன் அவரது நண்பா் சிவகுமாா் தங்கியிருந்தாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை சிவகுமாா் வெளிநாடு செல்வதற்காக புறப்பட்டாா். அவரை முகுந்தன் விமான நிலைய நிலையத்தில் வழியனுப்பி வைத்துவிட்டு, காரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

பல்லாவரம்-துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலைப்பகுதியில் செல்லும்போது காா் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. காா் அங்கிருந்த சாலைத் தடுப்புகளின் வேகமாக மோதி, தலைகீழாக கவிழ்ந்தது. மேலும் காா், இரண்டு பகுதிகளாக பிளந்தது. இதில் பலத்த காயமடைந்த முகுந்தன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இது தொடா்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com