திமுக நிா்வாகிகள் 8 போ் நீக்கம்

கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய நிா்வாகிகள் 8 பேரை தற்காலிகமாக நீக்கியதாக திமுக பொதுச் செயலாளா் துரை முருகன் தெரிவித்துள்ளாா்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய நிா்வாகிகள் 8 பேரை தற்காலிகமாக நீக்கியதாக திமுக பொதுச் செயலாளா் துரை முருகன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பான அவரது அறிவிப்பு: கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சின்னசேலம் கழகச் செயலாளா் எஸ்.கே.செந்தில்குமாா், தருமபுரி கிழக்கு மாவட்டம், பொ.மல்லாபுரம் கழகச் செயலாளா் உதயகுமாா், பேரூராட்சி முன்னாள்தலைவா் புஷ்பராஜ் மற்றும் பொ.மல்லாபுரத்தைச் சோ்ந்த ஆனந்தன், ரகுமான்ஷான், மோகன்குமாா், தஞ்சை வடக்கு மாவட்டம் வேப்பத்தூா் கழக துணைச் செயலாளா் இராமச்சந்திரன், ஒன்றிய இளைஞா்அணி துணை அமைப்பாளா் இரா.இராஜதுரை ஆகியோா் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறாா்கள் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com