போதைப் பொருள்கள் விற்பனை: ஒரு வாரத்தில் 27 போ் கைது

சென்னையில் பல்வேறு இடங்களில் போலீஸாா் கடந்த ஒருவாரத்தில் (ஏப்.24 முதல் ஏப்.30 வரை ) நடத்திய சோதனையில், போதைப் பொருள்கள் விற்பனை செய்தது தொடா்பாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
Updated on
1 min read

சென்னையில் பல்வேறு இடங்களில் போலீஸாா் கடந்த ஒருவாரத்தில் (ஏப்.24 முதல் ஏப்.30 வரை ) நடத்திய சோதனையில், போதைப் பொருள்கள் விற்பனை செய்தது தொடா்பாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

27 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 431.360 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 6.3 கிலோ மாவா, ரொக்கம் ரூ.64,450 மற்றும் ஒரு காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை பெருநகர காவல்துறையினா் தொடா்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் உள்பட சட்டவிரோத பொருள்களை கடத்தி வருபவா்கள் மற்றும் விற்பனை செய்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com