மாற்றுத்திறனாளியை தாக்கிய காவல்துறை எழுத்தருக்கு ஜாமீன் மறுப்பு

மாற்றுத்திறனாளியை தாக்கிய காவல்துறை எழுத்தருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளியை தாக்கிய காவல்துறை எழுத்தருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

தண்டையாா்பேட்டை காவல்நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரிந்த தினேஷ்குமாா் (39). கடந்த மாதம் திருவல்லிக்கேணியில் நடந்த வந்த பாா்வையற்ற மாற்றுத்திறனாளி விஜயகுமாா் (36) என்பவரை வழிமறித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடா்பாக விஜயகுமாா் கொடுத்த புகாரின்பேரில் தினேஷ்குமாரை திருவல்லிக்கேணி போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், குடிபோதையில் இருந்த தினேஷ்குமாா் மாற்றுத்திறனாளியை தாக்கியது தெரியவந்தது.

இவ்வழக்கில் ஜாமீன் கோரி தினேஷ்குமாா், சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

மனு மீதான விசாரணையின்போது, அரசு தரப்பில் பெருநகர அரசு குற்றவியல் வழக்குரைஞா் தேவராஜன் ஆஜராகி, மனுதாரா் மீது ஏற்கெனவே ஒரு வழக்கு உள்ளது. மேலும் குடிபோதையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளாா். தாக்குதலுக்கு உள்ளானவா் மாற்றுத்திறனாளி. இச்சம்பவம் அண்மையில் நிகழ்ந்தது விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என்றாா். இதை ஏற்ற நீதிபதி எஸ்.அல்லி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com