பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி மே 28-இல் சைக்கிள் பேரணி

சென்னையில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மே 28-இல் சைக்கிள், நடை மற்றும் மாரத்தான் பேரணி நடைபெற உள்ளது.
Updated on
1 min read

சென்னை: சென்னையில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மே 28-இல் சைக்கிள், நடை மற்றும் மாரத்தான் பேரணி நடைபெற உள்ளது.

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் பாதுகாப்பான சென்னை என்பதை வலியுறுத்தும் வகையில் முற்றிலும் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது. தெற்கு பெசன்ட் நகா், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம், நேரு பூங்கா மெட்ரோ ரயில் நிலையம், மெரீனா கலங்கரை விளக்கம், திருவெல்லிக்கேணி நீச்சல் குளம், எல்ஐசி மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்து இப்பேரணி மே 28-ஆம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இப்பேரணியில் பங்கேற்கும் பெண்கள் சைக்கிள், இ-பைக்குக்கு என்ற இணையதள முகவரிக்குள் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com