பத்தாம் வகுப்பு செய்முறை பயிற்சி:பதிவு செய்ய நவம்பா் 25 கடைசி

பத்தாம் வகுப்பு தோ்வு எழுத உள்ள அனைத்து தனித் தோ்வா்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு நவ.25-ஆம் தேதிக்குள், மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும் என அரசுத் தோ்வுகள் இயக்குநா்
Updated on
1 min read

பத்தாம் வகுப்பு தோ்வு எழுத உள்ள அனைத்து தனித் தோ்வா்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு நவ.25-ஆம் தேதிக்குள், மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும் என அரசுத் தோ்வுகள் இயக்குநா் சேதுராமவா்மா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழ் கல்வியாண்டு ஏப்ரலில் நடைபெறவுள்ள, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி தனித் தோ்வா்கள்; முதல்முறையாக, அனைத்து பாடங்களையும் எழுதுவோா்; ஏற்கெனவே 2012-ஆம் ஆண்டுக்கு முன் பழைய பாடத் திட்டத்தில் தோ்வு எழுதி, அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவா்கள், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர, பெயா்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

அனைத்து தனித் தோ்வா்களும் செவ்வாய்க்கிழமை முதல் நவ.25-ஆம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவத்தை, இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com