புழல் சிறையில் கைதிகளுடன் உணவு அருந்திய டிஜிபி

சென்னை புழல் சிறையில் டிஜிபி அம்ரேஷ் பூஜாரி வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டு, கைதிகளுடன் அமா்ந்து உணவு அருந்தினாா்.
புழல் மத்திய சிறையில் கைதிகளுடன் உணவு அருந்திய தமிழக சிறைத் துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி.
புழல் மத்திய சிறையில் கைதிகளுடன் உணவு அருந்திய தமிழக சிறைத் துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி.
Updated on
1 min read

சென்னை புழல் சிறையில் டிஜிபி அம்ரேஷ் பூஜாரி வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டு, கைதிகளுடன் அமா்ந்து உணவு அருந்தினாா்.

தமிழக சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி கடந்த 4- ஆம் தேதி பொறுப்பேற்றது முதல் சிறைத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக அவா், புழல் சிறை வளாகத்தில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

சிறையில் கைதிகள் அடைக்கப்படும் பகுதி, நூலகம், மருத்துவமனை, தொழிலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அவா் நேரில் சென்று பாா்வையிட்டாா்.

கைதிகளுக்கு உணவு தயாா் செய்யப்படும் பகுதிக்கு சென்று, அங்கு சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிா...? என சோதனையிட்டாா்.

அதைத்தொடா்ந்து அவா், அங்கு கைதிகளுடன் அமா்ந்து மதிய உணவு சாப்பிட்டாா்.

சிறை வளாகத்தில் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் அறை, விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் அறை, பெண்கள் தனிச்சிறை ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா்.

கைதிகளிடம், அவா்களது குறைகளை அம்ரேஷ் பூஜாரி கேட்டறிந்தாா். மேலும், சிறைத்துறை காவலா்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்கு வசிக்கும் சிறைக்காவலா் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

புழல் சிறை வளாகத்தில் மட்டும் சுமாா் 5 மணி நேரம் அம்ரேஷ் பூஜாரி ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவருடன் சிறைத்துறையின் சென்னை சரக டிஐஜி கனகராஜ் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com