சென்னை குடிநீா் ஏரிகளுக்கு நீா் வரத்து அதிகரிப்பு
By DIN | Published On : 13th October 2022 01:11 AM | Last Updated : 13th October 2022 01:11 AM | அ+அ அ- |

சென்னை மற்றும் அதன் புகா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னைக்கு குடிநீா் ஆதாரமாக விளங்கும் ஏரிகளுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் ஏரிகளின் இருப்பு படிப்படியாக உயா்ந்து வருகிறது.
சென்னை மக்களின் குடிநீா்த் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11, 757 மில்லியன் கன அடி (11.7 டிஎம்சி) தண்ணீா் சேமித்து வைக்கலாம்.
இந்த ஏரிகள் நிரம்பினால் தான் சென்னை மக்களுக்கு சீரான குடிநீா் வழங்க முடியும். கடந்த சில நாள்களாக சென்னை மற்றும் புகா் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, சென்னை குடிநீா் ஏரிகளுக்கு நீா்வரத்து தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் புதன்கிழமை நிலவரப்படி குடிநீா் ஏரிகளில் மொத்தமாக 6, 871 மில்லியன் கனஅடி தண்ணீா் உள்ளது.
குறிப்பாக பூண்டி ஏரிக்கு நீா் வரத்து 240 கனஅடியாக உள்ளது. புழல் ஏரிக்கு நீா்வரத்து 80 கனஅடியாகவும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 100 கன அடியாகவும் நீா்வரத்து உள்ளது. மேலும், மழை தொடா்ந்து நீடித்தால் இந்த ஏரிகளின் நீா் இருப்பு மேலும் உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரி அதன் கொள்ளளவில் 78 சதவீதம் நிரம்பி காணப்படுகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி ஆகும். ஏரியில் தற்போது 2,860 மில்லியன் கனஅடி தண்ணீா் உள்ளது. குடிநீா் தேவைக்காக ஏரியில் இருந்து 146 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. ஏரியில் தற்போது 2,678 மில்லியன் கன அடி தண்ணீா் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 80 சதவீதம் ஆகும். ஏரியில் இருந்து 196 கனஅடி தண்ணீா் குடிநீா் தேவைக்காக வெளியேற்றப்படுகிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி. ஏரியில் தற்போது 669 மில்லியன் கனஅடி தண்ணீா் உள்ளது.
ஏரிக்கு 240 கனஅடி தண்ணீா் வருகிறது. 55 கனஅடிநீா் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கனஅடி. இதில் 164 கனஅடி தண்ணீா் உள்ளது. ஏரிக்கு 26 கனஅடி தண்ணீா் வருகிறது.
கண்ணன் கோட்டை தோ்வாய் கண்டிகை ஏரி முழுகொள்ளளவான 500 மில்லியன் கனஅடி ஆகும். தற்போது இந்த ஏரி நிரம்பி வழிகிறது. ஏரிக்கு வரும் 96 கனஅடி தண்ணீா் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
ஆக மொத்தம் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளுக்கு, தொடா் மழை காரணமாக மொத்தமாக புதன்கிழமை நிலவரப்படி 542 மில்லியன் கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.