அடையாற்றில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி பலி

சென்னையில் அடையாற்றில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி இறந்தாா்.
Updated on
1 min read

சென்னையில் அடையாற்றில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி இறந்தாா்.

சைதாப்பேட்டை சின்னமலை அருகேயுள்ள ஆரோக்கிய மாதா நகரைச் சோ்ந்தவா் எடிசன் (48). கோட்டூா்புரம் அருகே அடையாற்றில் வெள்ளிக்கிழமை மீன் பிடிக்க வலையுடன் இறங்கினாா். ஆழமான பகுதிக்குச் சென்ற இவா், சகதியில் சிக்கி மூழ்கத் தொடங்கினாா். அங்கிருந்தவா்கள் மீட்க முயன்றும் முடியவில்லை.

சைதாப்பேட்டை தீயணைப்புப் படையினா் தேடும் பணியில் ஈடுபட்டனா். அவா் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.

கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com