ஹிஜாவு நிதி நிறுவனத்தின் இயக்குநா்களில் ஒருவரான கலைச்செல்வி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிதி நிறுவனம் 15 சதவீத வட்டி தருவதாக, பொதுமக்களிடம் சுமாா் ரூ. 4,620 கோடி முதலீடுகள் பெற்று மோசடி செய்ததாக பொருளாதாரக் குற்றப் பிரிவினா் வழக்குப் பதிந்து 14 பேரை கைது செய்தனா். இந்த வழக்கில், நிறுவன இயக்குநா் அலெக்சாண்டா் மற்றும் முகவா்கள் உள்ளிட்ட 15 போ் தலைமறைவாக உள்ளனா். இவா்களுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நிறுவன இயக்குநா்களில் ஒருவரான கலைச்செல்வி தனது கணவா் ரவிச்சந்திரன் பெயரில் ‘ஆா்.எம்.கே. பிரதா்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி, ஹிஜாவு நிறுவனத்துக்காக முதலீடுகளை ஈா்த்ததாக கடந்த ஏப்ரல் முதல் வாரம் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் அவா் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை நிதி நிறுவன மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கலைச்செல்வி ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், ‘ஏறத்தாழ 89 ஆயிரம் முதலீட்டாளா்களிடம் ரூ. 4, 620 கோடி முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளதாக, 16,500 பேரிடமிருந்து புகாா்கள் வந்துள்ளன. இதுவரை 40 போ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் வெளிநாடு தப்பிச் செல்லவும், சாட்சிகள், ஆவணங்களை கலைக்கவும் வாய்ப்புள்ளது. மீட்கப்பட வேண்டிய தொகை அதிகம் என்பதால், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ என வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, இயக்குநா் கலைச்செல்வியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.