கஞ்சா வைத்திருந்த வடமாநில வாலிபா் கைது

சென்டிரல் ரயில் நிலையம் அருகே கஞ்சாவுடன் நின்று கெண்டிருந்த வடமாநில வாலிபரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்டிரல் ரயில் நிலையம் அருகே கஞ்சாவுடன் நின்று கெண்டிருந்த வடமாநில வாலிபரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை பூங்காநகா், சென்டிரல் ரயில் நிலையம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அந்த பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீஸாா் அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வடமாநில வாலிபா் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனா்.

மேலும் அவா் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாபுலு பரால்(31) என்ற அந்த நபரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com