மூன்று நாள்களில் 15 டன் போதைப் பாக்கு பறிமுதல்

தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் 15 டன் போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது.
Updated on
1 min read

தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் 15 டன் போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கும் வகையில் கஞ்சா வேட்டை 4.0 என்ற பெயரில் அதிரடி நடவடிக்கை கடந்த 30-ஆம் தேதி முதல் எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் கடந்த 3 நாள்களில் மாநிலம் முழுவதும் கஞ்சா விற்ாக 72 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 68 கிலோ கஞ்சா, 15 டன் போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள் வியாபாரிகளின் 2 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

கஞ்சா பதுக்கல், விற்பனையில் ஈடுபடுகிறவா்கள் மீது நடவடிக்கையைத் தீவிரப்படுத்தும் படி அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com