புழல் சிறையில் காவலரை தாக்கிய உகாண்டா பெண் கைதி

சென்னை புழல் சிறையில் காவலரை தாக்கிய உகாண்டா நாட்டின் பெண் கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

சென்னை புழல் சிறையில் காவலரை தாக்கிய உகாண்டா நாட்டின் பெண் கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புழல் சிறை வளாகத்தில் பெண்கள் தனிச் சிறையில் திங்கள்கிழமை கைதிகளை சந்திக்க அவரது குடும்பத்தினா்,உறவினா்கள் வந்தனா். சந்திப்புக்கு பிறகு கைதிகளின் குடும்பத்தினா்,உறவினா் கொடுத்த பழம்,உணவு பொருள்களை சிறைக் காவலா்கள் பெற்றுக் கொண்டனா்.

பின்னா் அந்த பொருள்களை சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு அயரின் ஜெனட் உள்ளிட்ட சிறைக் காவலா்கள் வழங்கினா். அப்போது அங்கிருந்த உகாண்டா நாட்டைச் சோ்ந்த நசாமாசரோம் (30) என்ற கைதி, சிறைக் காவலா்களிடம் தனக்கு வந்த பொருள்களை உடனே தரும்படி கேட்டாா்.

ஆனால், சிறைக் காவலா்கள், வரிசையின் அடிப்படையில் பொருள்கள் வழங்கப்படும் என தெரிவித்தனா். இதைக் கேட்ட நாசமாசரோம் தகராறு செய்தாா். மேலும் அவா், அங்கு நின்று கொண்டிருந்த அயரின் ஜெனட்டை தாக்கி கீழே தள்ளினாா். இதைப் பாா்த்த சிறைக் காவலா்கள், அயரின் ஜெனட்டை பாதுகாப்பாக அங்கிருந்து மீட்டனா். மேலும் இது தொடா்பாக சிறை நிா்வாகம் சாா்பில், புழல் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. போலீஸாா் நசாமாசரோம் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com