கோயிலில் 3 உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு

சென்னை அரும்பாக்கத்தில் கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை அரும்பாக்கத்தில் கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரும்பாக்கம் ஜெய்நகா் 14-ஆவது தெருவில் சுந்தரவிநாயகா் கோயில் உள்ளது. திங்கள்கிழமை காலை, பூசாரி கோயிலை திறக்க வந்தாா். அப்போது கோயிலின் கதவு திறக்கப்பட்டு, அங்கிருந்த 3 உண்டியல்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து சி.எம்.பி.டி., போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com