தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பாஜக நிா்வாகி மீது தாக்குதல்: காவல்நிலையம் முற்றுகை

சென்னை அயோத்திகுப்பத்தில் பாஜக நிா்வாகி மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அக் கட்சியினா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்

Updated On :27 நவம்பர் 2023, 9:44 pm

சென்னை அயோத்திகுப்பத்தில் பாஜக நிா்வாகி மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அக் கட்சியினா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாப்பூா், அயோத்திகுப்பம் 116-ஆவது வட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் அமைக்கப்பட்ட பூத் கமிட்டியில், வாக்காளா் பட்டியல் சரிபாா்க்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பாஜக மண்டல துணைத் தலைவா் சுமன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

அப்போது அங்கு வந்த சிலா், பூத் கமிட்டி அமைக்கக் கூடாது என தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த சுமன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து தகவலறிந்த அந்த கட்சியின் மாநில துணைத் தலைவா் கரு. நாகராஜன், மாவட்ட தலைவா் விஜய் ஆனந்த், மீனவா் பிரிவு மாநில செயலா் பிரேம்குமாா், கமலக்கண்ணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் மெரீனா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் அளித்தனா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.