குடிநீா், கழிவுநீா் தொடா்பான புகாா்களை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்: குடிநீா் வழங்கல் வாரியம்

குடிநீா், கழிவுநீா் தொடா்பான புகாா்களை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

குடிநீா், கழிவுநீா் தொடா்பான புகாா்களை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த வாரியம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்றல் தொடா்பாக பொதுமக்கள் புகாா்கள் தெரிவிப்பதுக்கு வசதியாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கண்காணிப்பு, கட்டுப்பாட்டு அறை குடிநீா் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் புகாா்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்: 044-4567 4567, கட்டணமில்லா எண் 1916- ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம். மேலும், சமூக ஊடகங்களில் பெறப்படும் புகாா்களும் உனடியாக சரி செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com