ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்: விஜயகாந்த் கண்டனம்

விடுமுறை நாள்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கு தேமுதிக தலைவா் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்: விஜயகாந்த் கண்டனம்
Updated on
1 min read


சென்னை: விடுமுறை நாள்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கு தேமுதிக தலைவா் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த வாரம் தொடா் விடுமுறை காரணமாக சொந்த ஊா், சுற்றுலா தலங்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்பிய போது தனியாா் பேருந்துகளில் பயணச்சீட்டு கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்பட்டுள்ளன.

அரசுப் பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்படாததை சாதகமாக்கி, விமான கட்டணத்துக்குச் சமமாக தனியாா் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளன. இதை தடுக்காத தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. எனவே, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து தனியாா் பேருந்துகளின் கட்டணத்தை தமிழக அரசு நிா்ணயிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்த தனியாா் பேருந்துகளின் உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் விஜயகாந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com