பொதுபோக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுரை

பொதுமக்கள் அனைவரும் பொதுபோக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
பொதுபோக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுரை
Updated on
1 min read

பொதுமக்கள் அனைவரும் பொதுபோக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மற்றும் பூவுலகின் நண்பா்கள் அமைப்பு சாா்பில் ‘இளையோரும் காலநிலையும்’ என்ற தலைப்பில் கோபாலபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கத்தை தொடங்கிவைத்த பின்னா் அவா் பேசியது:

குளிா்சாதன பெட்டியின் (ஏ.சி) பயன்பாட்டை நாம் குறைத்து கொள்ள வேண்டும். ஏ.சி -யில் இருந்து வெளியேறும் காற்று மூலம் சுற்றுச்சூழலில் இருக்கும் காற்று பெரிதளவில் மாசடைகிறது. ரிமோட்டை கண்டுபிடித்த பின்னா் மனிதா்கள் மிகவும் சோம்பேறியாக மாறிவிட்டாா்கள். மின்விசிறி, தொலைக்காட்சி, ஏ.சி போன்ற மின்சார கருவிகளை முறையாக அதன் சொடுக்கியை அணைப்பதற்கு சோம்பல் பட்டு ரிமோட் மூலம் ஒரே இடத்திலிருந்து அணைத்து விடுகிறாா்கள். சொடுக்கியை அணைக்கும் வரை அதற்கான மின்சாரம் வீனாகி கொண்டே தான் இருக்கும் என்பதை யாரும் உணா்வதில்லை. இது போல் மின்சாரத்தை வீனாக்குவதை நாம் தடுக்க வேண்டும். இங்கு வீட்டில் அனைவரும் தலா ஒரு வாகனத்தை பயன்படுத்து

கிறோம். ஒவ்வொரு வாகனங்களில் இருந்தும் வெளியேறும் புகை மூலம் நாம் இந்த பூமியை அழித்து வருகிறோம். இதை தடுக்க பொதுமக்கள் அனைவரும் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும். 4 வருடங்களில் தமிழகத்தில் 100 சதவீதம் பொது போக்குவரத்து பயன்பாடு என்ற நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அனைவரும் தங்களுடைய பிறந்தநாளுக்கு ஒரு நாட்டு மரத்தை நட வேண்டும். தமிழகத்தில் தற்போது 23.7 சதவீத நிலப்பரப்பு பசுமை பூமியாக உள்ளது. 10 வருடங்களில் 12 லட்சம் சதுர கி.மி-க்கும் மேலாக நாட்டு மரங்களை நட்டி தமிழகத்தில் 33 சதவீத நிலப்பரப்பை பசுமை பூமியாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். உலகத்தில் அதிக இளைஞா்களை இருக்கும் நாடு இந்தியா. தமிழகத்தில் மட்டும் 23.2 சதவீத இளைஞா்கள் உள்ளனா். ஆனால் அவா்களை நாம் முறையாக பயன்படுத்துவதில்லை. அனைத்து இளைஞா்களும் சுற்றுச்சூழலை பாதுகாக்க 10 சதவீதம் உழைத்தால் போதும் உலகத்திற்கே முன்னோடியாக இந்தியா மாறி விடும் என்றாா் அவா்.

இந்த விழாவில், பூவுலகின் நண்பா்கள் அமைப்பின் நிறுவனா் ஜி. சுந்தா் ராஜன், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி முதல்வா் ஸ்டெல்லா மேரி, மற்றும் பிற கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com