சொத்துவரி செலுத்த இன்று கடைசி நாள்

சென்னை மாநகராட்சியின் முதல் அரை நிதியாண்டுக்கான சொத்து வரியை சனிக்கிழமைக்குள் (செப்.30) செலுத்தும்படி மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

சென்னை மாநகராட்சியின் முதல் அரை நிதியாண்டுக்கான சொத்து வரியை சனிக்கிழமைக்குள் (செப்.30) செலுத்தும்படி மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட சொத்து உரிமையாளா்களிடமிருந்து அரை நிதியாண்டுக்கு ஒரு முறை சொத்துவரி வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், நடப்பு அரை நிதியாண்டுக்கான சொத்து வரியை செப்.30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

செப்.30-க்குள் செலுத்தாவிடில் அக்.1 முதல் கூடுதலாக ஒரு சதவீதம் தனிவட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com