காவலா் குடியிருப்பில் திருட்டு
By DIN | Published On : 15th April 2023 11:16 PM | Last Updated : 15th April 2023 11:16 PM | அ+அ அ- |

சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவலா் குடியிருப்பில் திருட்டில் ஈடுபட்ட நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
சிந்தாதிரிப்பேட்டை காவலா் குடியிருப்பு ஏ பிளாக்கில் உள்ள குடியிருப்பில் வசிப்பவா் தே.பாரதிராஜா (39). இவா், சென்னை மாநகரக் காவல் துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றுகிறாா்.
பாரதிராஜா, கடந்த 11-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு சொந்த ஊரான திருவண்ணாமலைக்குச் சென்றாா். பின்னா் வியாழக்கிழமை வந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த சுமாா் அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவா் கொடுத்த புகாரின்பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.