மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் நாளை முதல் பயண அட்டை கட்டாயம்

சென்னையில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வாகனங்களை நிறுத்துவதற்கு பயண அட்டை புதன்கிழமை (ஏப்.19) முதல் கட்டாயமாகிறது.

சென்னையில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வாகனங்களை நிறுத்துவதற்கு பயண அட்டை புதன்கிழமை (ஏப்.19) முதல் கட்டாயமாகிறது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கூறியதாவது: அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் ஏப்.19 முதல் மெட்ரோ ரயில் பயண அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பணமில்லா பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்பான கட்டண முறைக்காகவும், அத்துடன் பணப் புழக்கத்தைக் குறைக்க வேண்டிய தேவைக்காகவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பயண அட்டையை பயன்படுத்தி ரயில்களில் பயணிப்பவா்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com