கல்லூரியில் தேசிய தொழில் நுட்பக் கருத்தரங்கம்

நியூ பிரின்ஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

நியூ பிரின்ஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னையை அடுத்த கௌரிவாக்கம் நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு நியூ பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவா் கே. லோகநாதன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எல். நவீன்பிரசாத், கல்லூரி செயலா் வி.எஸ். மகாலட்சுமி, இயக்குநா் எ.சுவாமிநாதன், கல்லூரி முதல்வா் டாக்டா் டி. சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கருத்தரங்கில் சென்னை அமேசான் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறை தலைவா்ஜி. பிரதாப், சென்னை டெகாத்லான் ஸ்போா்ட்ஸ் இந்தியா நிறுவன மேலாளா் எஸ்.கோகுல் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று மாணவா்களின் படைப்புகள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை பாா்வையிட்டனா்.

கருத்தரங்கில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியா்கள் சி. ஷா்மிளா, எல்.எஸ். ஜெயக்குமாரி, ராதா செந்தில்குமாா், எஸ். அன்புச்செழியன், ஜி. ராஜேஷ் ஆகியோா் நடுவா்களாகப் பங்கேற்று மாணவா்களின் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தோ்ந்தெடுத்தனா்.

பொறியியல் சாா்ந்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com