2019 - 2040 ஆண்டுகளுக்கு இடையிலான காலகட்டத்தில், சென்னையில் உள்ள கட்டடங்கள் 23.2 கோடி டன் கரியமில வாயுவை (கார்பன் -டை- ஆக்ஸைடு) வெளியிடும் என சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை போன்ற நகரத்தில் உருவாகும் ஒட்டுமொத்த கரியமில வாயுவில் கட்டடங்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் 25% கரியமில வாயுவை வெளியிடுவதாகத் தெரியவந்துள்ளது.
கட்டுமானத்துக்குத் தேவையான சிமென்ட், இரும்பு (ஸ்டீல்), அவைகளைக் கொண்டுவருவதற்கான போக்குவரத்து, கட்டுமானத்துக்குத் தேவையான மின்சார பயன்பாடு, அதனால் இயக்கப்படும் சாதனங்கள், போன்றவை கரியமில வாயு வெளியாவதற்கான முக்கிய காரணங்கள்.
நகரமயமாக்கல் மிக வேகமாக நடைபெற்று வருவதால், நாடு முழுவதும் கட்டடங்கள் வேகமாக உருவாகி வருகின்றன.
கட்டுமானத் துறை மூலம் கரியமில வாயு வெளியாவது குறித்து தரவுகள் அடிப்படையில் மூன்று கட்ட ஆய்வுகளை சென்னை ஐஐடி குழு மேற்கொண்டது.
முதல் கட்டத்தில் நில அடிப்படையிலான கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இரண்டாவது கட்டத்தில் நகரமயமாக்கல் மூலம் வெளியாகும் கரியமில வாயுவை புரியவைப்பதற்காக வாழ்க்கை சுழற்சி முறைகளை பகுப்பாய்வு செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக கரியமில வாயு வெளியாவதைக் குறைக்கும் நோக்கத்தில், கட்டுமான பணிகளுக்குத் தேவையான மாற்று மூலப்பொருள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வாழ்க்கை சுழற்சி முறைகளை பகுப்பாய்வு செய்ததன் மூலம், 2040ஆம் ஆண்டு சென்னை நகரத்திலுள்ள கட்டடங்கள், கட்டுமானப் பணிகள் மூலமும் அதற்குத் தேவையான ஆற்றல்கள் மூலமும், 23.1 கோடி டன் கரியமில வாயுவை வெளியிடும் என கணக்கிடப்பட்டது.
மேலும், கட்டுமானங்களுக்கு கரியமில வாயுவை வெளியிடாத புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்துவதையும் இந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது.
தூய்மையான ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், கட்டுமான முறைகளில் மாற்றங்கள் செய்வதன் மூலமும் கரியமில வாயு வெளியாகும் அளவு 2019 - 2040 காலகட்டத்தில் 11.5 கோடி டன்னாக குறையும் எனவும் ஆய்வு முடிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்முறை அரேபிய படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான்!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



