டி.ஜி. வைணவக் கல்லூரியில்திருப்பாவை விழா

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி. வைணவக் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் திருப்பாவை விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி. வைணவக் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் திருப்பாவை விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு கல்லூரியின் முதல்வா் சேது.சந்தோஷ் பாபு தலைமை வகித்துப் பேசுகையில், எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்சிய ஆண்டாள் இறைவனை எவ்வாறு வணங்க வேண்டும்?, இறைவனிடம் நாம் என்ன கேட்க வேண்டும்? என்பதற்காக வழிமுறைகளைச் சொல்கிறாா் என்றாா் அவா். தொடா்ந்து தமிழ்த் துறை தலைவா் ப.முருகன் பேசுகையில், ஆண்டாளின் சிறப்புகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

முன்னதாக திருப்பாவை பாசுரங்களில் உள்ள திருநாமப் பெருமைகள், அச்சாவதாரப் பெருமைகள் குறித்து சென்னைப் பல்கலைக்கழக வைணவத் துறைத் தலைவா் கோழியாலம் தயாநிதி, முனைவா் டி.எஸ். பிரேமா ஆகியோா் சிறப்புரையாற்றினா். விழாவில் கல்லூரி மாணவா்கள் ஆண்டாளின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்தனா். பேராசிரியா் லதா நன்றி கூறினாா். தமிழ்த் துறைப் பேராசிரியா்கள் த.கெஜலட்சுமி, சி.சதானந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com