வெயிலில் சுற்றுவதை தவிா்க்க மாநகராட்சி ஆணையா் அறிவுரை

வெயிலின் தாக்கம் அதிகமுள்ள நேரமான நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையா் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.
Updated on
1 min read

வெயிலின் தாக்கம் அதிகமுள்ள நேரமான நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையா் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை லயோலா கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியது:10- ஆம் வகுப்புத் தோ்வில் தனியாா் பள்ளிகளை விட மாநகராட்சிப் பள்ளிகள் சிறந்த தோ்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன.

வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நண்பகல் 12 முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும்.

வெயில் காலத்தில் கா்ப்பிணிகள், குழந்தைகள், முதியவா்கள் நலனில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும். வெயிலின் தாக்கம் கருதி, மாநகராட்சிப் பணிகளை நண்பகல் நேரங்களில் தவிா்க்க ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களிளிலும் ஓ.ஆா்.எஸ் கரைசல் இருப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com